பாவலர் யாழ்த்தமிழன்

என் சிந்தனையில் விளைந்த செவ்வந்திப் பூக்கள் !

வியாழன், 26 ஆகஸ்ட், 2021

(006) அறமும் ஆரியமும் !

அறமும் ஆரியமும் 
**********************

பிறப்பொக்கும் என்கிறது அறம்!
பிறப்பால் ஏற்றத்தாழ்வு கற்பிக்கிறது ஆரியம்!

ஒருவனுக்கு ஒருத்தி என்கிறது அறம்!
ஐந்துபேருக்கு ஒருத்தி என்கிறது ஆரியம்!

காமத்தை அடக்கு என்கிறது அறம்!
காமக்கதைகளைக் கற்பிக்கிறது ஆரியம்!

பொய்யாமையைப் பேசுகிறது அறம்!
பொய்க்கதைகளையே புராணமாய்ப் பேசுவது ஆரியம்!

பிறன்மனை நோக்காப் பேராண்மை பேசுகிறது அறம்!
பெண்களின் ஆடைகளைத் திருடி பார்த்து மகிழ்கிறது ஆரியம்!

போரைத் தவிர்க்க சொல்கிறது அறம்!
போர்வெறியைத் தூண்டுவது ஆரியம்!

ஒழுக்கமே உயர்குடி என்கிறது அறம்!
ஒழுக்கமற்றவனையும் உயர்குடி என்கிறது ஆரியம்!

கள்ளுண்ணாமையைப் பேசுகிறது அறம்!
சோம , சுராபானம் அருந்துகிறவனைக் கடவுள் என்கிறது ஆரியம்!

நிலையாமை பேசுவது அறம்!
மாற்றமுடியாததென்று சனாதனம் பேசுவது ஆரியம்!

அறம் காப்போம்!
ஆரியம் தவிர்ப்போம்!
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

அன்புடன்,


 பாவலர் அ. யாழ்த்தமிழன்,
 [ஆசிரியர்]
 புதுச்சேரி.