என் சிந்தனையில் விளைந்த செவ்வந்திப் பூக்கள் !

நன்றி நவிலல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நன்றி நவிலல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2021

(002) தமிழ்க் குயிலுக்கு என் வணக்கமும் நன்றியும் !


*வணங்குகிறேன் வண்ணக் குயிலே*

தமிழ்ச் சுடரை  என்னுள் ஏற்றி வைத்த  தலைவன், இனிய தமிழுக்கு இசை சேர்த்த ஏந்தல்,   தண்டமிழ்க்  கருவூலம், பொன்றாப் புகழ் வாரி , புதுவைத் தமிழ்க் குயில்பாவேந்தர் பாரதிதாசனுக்கு என்  வணக்கமும் நன்றியும்  ! 


வலைப்பூ தொடங்கியுள்ள இந்த நன்னாளில் உன் பாடலை நினைவு கூர்வதில் பெருமை கொள்கிறேன் ! 

------------------------------

                    தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
                  தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்
                  தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்
                  தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்
                  தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்
                  தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
                  தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்
                  தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!
                                                         (தமிழுக்கும் அமுதென்று)


                  தமிழ் எங்கள் இளமைக்குப் பால் - இன்பத்
                  தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்
                  தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்
                  தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்
                  தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்
                  தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
                  தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்
                  தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!
                                                       (தமிழுக்கும் அமுதென்று)


புதுவைக் குயில் பாவேந்தர் பாரதிதாசன்


-------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

பாவலர் யாழ்த்தமிழன்,

ஆட்சியர்,

”பாவலர் யாழ்த்தமிழன்” வலைப்பூ

[தி.ஆ: 2052, கடகம் (ஆடி) 25]

(10-08-2021}

---------------------------------------------------------------------------------------




(001) நன்றி ! நன்றி !! நன்றி !!!

...........................ன்றி ..........................

”பாவலர் யாழ்த்தமிழன்” என்னும் இந்த வலைப்பூவை உருவாக்கி  எனக்களித்த, ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூலின் ஆட்சியர், தமிழ்த்திரு .வை.வேதரெத்தினம் ஐயா அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றியைக் காணிக்கையாக்குகிறேன்  !

தமிழ்த்திரு. வை.வேதரெத்தினம், வணி.இ


 -----------------------------------------------------------------------

அன்புடன்,

பாவலர் அ.யாழ்த்தமிழன்

புதுச்சேரி

[தி.ஆ:2052, கடகம் (ஆடி) 25]

{10-08-2021}

 ----------------------------------------------------------------------