அறவெண்பா!
🍁🍁🍁🍁🍁🍁
அறநெறி யாதென ஆய்ந்திடல் நன்றாம்
குறளைத் துணையெனக் கொண்டே!- குறையுள
ஆரியப் பண்பை யகற்றிட ஓங்குமே
நேரிய நல்லறம் தான்.
வாய்மையும் ஈதலும் வாழ்வறமாய் ஏற்றுநிதம்
தூய்மை மனத்தார் துலங்குவார் !- ஆய்ந்துநல்
அன்பே உயர்ந்த அறமெனக் கொண்டுலகில்
இன்பமாய் வாழ்தல் நலம்.
உயிர்களிடம் அன்புசெயல் உள்ளத்தில் தூய்மை
முயன்றுநிதம் கொள்வீர் முறையே! - நயமிலாக்
காமம் வெகுளி களைந்து துணிவுடன்
தீமையை மாய்த்தல் சிறப்பு.
அன்புடன்,
பாவலர் அ. யாழ்த்தமிழன்,
புதுச்சேரி